பதிவு செய்த நாள்
26
ஆக
2018
08:08
திருநெல்வேலி, திருச்செந்துார் முருகன் கோயிலில் இடிந்த கிரிபிரகாரத்தை விரைந்து கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருச்செந்துார், சுப்பிரமணியசுவாமி கோயிலில் கிரிபிரகார மண்டபம் 1974ல் கட்டப்பட்டது. இது கடந்த 2017 டிசம்பர் 14ல் இடிந்து விழுந்தது. இதில் ஒரு பெண் பலியானார், சிலர் காயமுற்றனர்.கடந்த 8 மாதங்களாக பக்தர்கள் பிரகாரத்தில் பகலில் சுட்டெரிக்கும் வெயிலில் நடக்கின்றனர்.
அங்கபிரதட்சணம் தற்போது நடக்கவில்லை.சஷ்டி மண்டபம் இடிப்புகோயில் வாசல் முன்யுள்ள கந்தசஷ்டி மண்டபத்திலும் சிமெண்ட் ஸ்டாப்புகள் இடிந்து விழுந்ததால் அதனையும் முழுவதுமாக இடித்துவிட்டு புதிதாக கட்ட முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த மண்டபம் இடிக்கப்பட்டுவருகிறது.கமிட்டி கூடவில்லைகோயிலில் இடிந்த பிரகார மண்டபத்தை கட்டுவதற்கு இன்னமும் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்படவில்லை. அதற்கான திட்டமிட வேண்டிய அறநிலையத்துறை திருப்பணிகளுக்கான கூடுதல் ஆணையர், ஸ்தபதிகள் சிலை விவகாரத்தில் சிக்கலில்இருக்கின்றனர். இங்கு மண்டபம் கட்டி தருவதற்கும், நிதியளிக்கவும் தமிழகத்திலும், கடல் கடந்தும் உபயதாரர்கள் தயாராக உள்ளனர். அரசு காலதாமதத்தால் பணிகள் முடங்கிக்கிடக்கிறது. கட்டுமான பணியினை விரைந்து முடிக்கவேண்டும் என பக்தர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.