பதிவு செய்த நாள்
28
ஆக
2018
03:08
மானாமதுரை:மானாமதுரையில் நீர் நிலைகளுக்கு தீங்கு ஏற்படுத்தாத களிமண் விநாயகர்சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. மானாமதுரையில் வருடந்தோறும் சீசனிற்கு தகுந்தாற்போல் மண்பாண்ட பொருட்கள் தயாரிக்கப்பட்டுபல இடங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டுவருகின்றன. இங்கு கார்த்திகை விளக்குகள்,மண் கூஜாக்கள், சமையல் பொருட்கள்,கர்நாடக இசைக்கருவியான கடம்,விநாயகர் சிலைகள் ஆகியவை அழகிய வடிவமைப்புடன் வடிவைமைக்கப்படுகின்றன.
அடுத்த மாதம் 13 ந் தேதி நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்திக்காகவிநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணியில் மண்பாண்ட கலைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.வீட்டில் வைத்து பூஜை செய்வதற்காக சிறிய விநாயகர் சிலைகளும்,தெருக்களில் வைத்துபூஜை செய்வதற்கு 2 அடியில் இருந்து 7 அடி வரை உயரமுள்ள சிலைகளும் தயாரிக்கப்பட்டு வருகின்றன. மண்பாண்ட தொழிலாளி தேவதாஸ் 45, கூறுகையில்,மானாமதுரையில் தயாரிக்கப்படும்விநாயகர் சிலைகள் முற்றிலும் கண்மாய் மற்றும் ஆறுகளில் இருந்து எடுக்கப்படும் மணலை கொண்டுதயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த சிலைகளை நீர் நிலைகளில் கரைக்கும் போது எளிதாக கரையும்வகையிலும்,நீராதாரத்தை சேமிக்கும் வகையிலும் களிமண்ணால் தயார் செய்யப்படுவதாலும்,மேலும்வர்ணத்திற்கு பெயின்ட் பயன்படுத்தாமல் வர்ண பொடிகளை கொண்டு கலர் அடிப்பதாலும் அனைத்து பகுதிகளிலிருந்தும் மானாமதுரைக்கு வந்து சிலைகளை வாங்கி செல்கின்றனர் என்றார்.