பழநி: பழநி பாலசமுத்திரம் அகோபில வரதராஜப்பெருமாள் கோயிலில் ஆவணி பிரம்மோற்ஸவ விழாவில் நேற்று திருக்கல்யாணம் நடந்தது. பழநி முருகன்கோயிலைச் சார்ந்த, பாலசமுத்திரம் அகோபில வரதராஜப்பெருமாள் கோயிலில் ஆவணி பிரம்மோற்ஸவ விழா ஆக.,22ல் கொடியேற்றத்துடன் துவங்கி செப்.1 வரை நடக்கிறது. நேற்று மாலை பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவிக்கு சிறப்பு அபிேஷக, அலங்காரத்தில் திருக்கல்யாணம் நடந்தது. மணக்கோலத்தில் பவளக்கால் சப்பரத்தில் பெருமாள் எழுந்தருளினார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை (ஆக.,30ல்) காலை தேரோட்டம்நடக்கிறது. ஏற்பாடுகளை இணை ஆணையர் செல்வராஜ், உதவி ஆணையர் செந்தில்குமார் செய்கின்றனர்.