பதிவு செய்த நாள்
29
ஆக
2018
10:08
புவனகிரி: புவனகிரி ராகவேந்திரர் கோவிலில் நடந்த ஆராதனை விழாவில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். புவனகிரி ராகவேந்திரா கோவிலில் நேற்று ஆராதனை விழா நடந்தது. அதையொட்டி ராகவேந்திரருக்கு, சிறப்பு அபிஷேக, தீபாராதனை நடந்தது. மதியம் 1:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை பக்தி பாடல்கள் இன்னிசை கச்சேரியும், இரவு ராகவேந்திரர் சுவாமி வீதியுலா காட்சி நடந்தது. பூஜைகளை, நரசிம்ம ஆச்சாரியார், ரகு ஆச்சாரியார் செய்தனர். விழாவில், புவனகிரியை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
கடலுார்: கூத்தப்பாக்கம் ராகவேந்திரர் கோவிலில் ஆராதனை விழா நேற்று முன்தினம் துவங்கியது. நேற்று காலை சுப்ரபாதம், நிர்மால்யம், வேதபாராயணம், சிறப்பு அபிஷேகம், நாமசங்கீர்த்தனம் நடந்தது. மூலவர் ராகவேந்திரர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இன்று 29ம் தேதி காலை 9:30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.