அழகன்குளம்: ராமநாதபுரம் அருகே அழகன்குளத்தில் சிவகாமி, நடராஜர் கோயிலில் வருஷாபிஷேக விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். காலை 7:00 மணிக்கு ஞான முதல்வன் வழிபாடு, கோபூஜை, வருண மந்திர ஜெபம், தேவார பண்ணிசை நிகழ்ச்சி நடந்தது. காலை 11:00 மணிக்கு சிறப்பு யாகவேள்வி, பூர்ணாஹூதி, சிறப்பு அபிஷேகம் நடந்தது.