எஸ்.பி.பட்டினம்: திருவாடானை அருகே ஓரியூர் புனித அருளானந்தர் ஆலயத்தில் உள்ள ஆரோக்கிய அன்னை பிறப்பு விழா கொடியேற்றம் நேற்று மாலை 6:30 மணிக்கு நடந்தது. முன்னதாக நடந்த சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தினமும் காலை 6:00 மணிக்கு திருப்பலியும் ஒப்புரவு அருட்சாதனமும், நோயாளிகளுக்கான மந்திரிப்பும் நடைபெறும். முக்கிய நிகழ்ச்சியாக செப்.7 இரவு 8:30 மணிக்கு தேர்பவனி நடைபெறும். ஏற்பாடுகளை பங்கு இறைமக்கள், கிராம தலைவர்கள், இயேசு சபை குழுமத்தினர் செய்து வருகின்றனர்.