பதிவு செய்த நாள்
03
செப்
2018
11:09
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், நேற்று நடந்த ஆவணி கிருத்திகை விழாவில், காவடிகளுடன் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர். திருத்தணி முருகன் கோவிலில், ஆவணி மாத கிருத்திகை விழா, நேற்று நடந்தது.விழாவை ஒட்டி, அதிகாலை, 4:30 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்கக்கிரீடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடந்தது.காலை, 9:30 மணிக்கு, காவடி மண்டபத்தில், உற்சவர் பெருமானுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு, 7:00 மணிக்கு உற்சவர் முருகப்பெருமான், வள்ளி - தெய்வானையுடன், வெள்ளி மயில் வாகனத்தில், மாடவீதியில் ஒரு முறை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பொது வழியில், பக்தர்கள் மூலவரை தரிசிக்க, ஐந்து மணி நேரம் காத்திருந்து, மூலவரை தரிசித்தனர். மேலும், 200, 100 மற்றும் 25 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டில் இரண்டு மணி நேரம் காத்திருந்து, பக்தர்கள் மூலவரை தரிசித்தனர். அதிக அளவில் பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்ததால், பக்தர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.