காத்மண்ட் : நேபாளத்தில் 2015 ம் ஆண்டு ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் போது பாதிக்கப்பட்ட லலித்புர் கிருஷ்ணன் கோயில், 3 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்தது. தற்போது கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு 3 ஆண்டுகளுக்கு பின் இக்கோயில் திறக்கப்பட்டுள்ளது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.