Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கருட தண்டகத்தை விளக்கும் ஓவியம் தெற்கே ஒரு காமாக்கியா
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தவறு செய்தால் தண்டனையை ஏற்றுக்கொள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 பிப்
2012
04:02

அரிசிமாவு ஒன்று தான். ஆனால், அதில் எத்தனையோ விதமான பலகாரம் செய்து சாப்பிடுகிறோம். அவற்றின் பெயரும், சுவையும் மாறுபடுகின்றன. அதுபோல, மூலப்பரம் பொருள் ஒன்று தான். அவரே பலவித வடிவம், பெயர் தாங்கி கோயில்களில் அருள்பாலிக்கிறார்.

பட்டம் பெற்றவர்கள் அனைவரும் உயர்பதவிக்கு ஆசைப்படுகிறார்கள். ஆனால், எல்லோருடைய எண்ணமும் நிறைவேறுவதில்லை. அதற்காக கல்வி கற்றுத் தந்த ஆசிரியரையோ, கல்விக்கூடத்தையோ குறை சொல்லிப் பயனில்லை. படித்ததைப் பயனுள்ளதாக்கும் முயற்சியை நாம் தான் செய்ய வேண்டும்.

காலையில் நீராடி சிலர் பூஜை செய்வர். வாய் பகவந்நாமாவையோ, மந்திரத்தையோ ஜெபித்துக் கொண்டிருக்கும். ஆனால், மனம் வேறு எதையோ நினைத்துக் கொண்டிருக்கும். வழிபாடு என்பது மனதை, முழுமையாக இறைசிந்தனையில் ஈடுபடுத்துவது தான்.

வாழ்வில் இன்பதுன்பம் மாறி மாறி உண்டாகலாம். இறைவன் எப்போதும் நமக்குத் துணை இருப்பான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை வேண்டும். அந்த நம்பிக்கையே,செயலாற்றத் தேவையான ஊக்கத்தை உங்களுக்கு வழங்கிவிடும்.

மனிதனின் கடைசி மூச்சு பிரியும் போது கூட பகவானின் நாமத்தைச் செல்ல வேண்டும் என்று சாஸ்திரம் நமக்கு கட்டளையிடுகிறது. அந்த பழக்கம் ஒருநாளில் வந்துவிடாது. இடைவிடாத பயிற்சியும், முயற்சியும் இருந்தால் மட்டுமே இந்நிலையை அடைய முடியும்.

உங்கள் குழந்தையை கிருஷ்ணா, கோபாலா, கண்ணா என்று அழைத்து மகிழுங்கள். கூப்பிடும் போதெல்லாம் அந்த கண்ணனையே அழைப்பதாக எண்ணிக் கொள்ளுங்கள். இப்படி பத்துமுறை அழைத்தால் போதும். அதுவே பஜனையாகி விடும்.

தீர்த்த ஸ்நானம், மவுனவிரதம், தியானம் என்று சிரமப்பட்டுத் தான் கடவுளை அடைய வேண்டும் என்ற அவசியமில்லை. கலியுகத்தில் கடவுளின் பெயரைச் சொல்வது ஒன்றே போதுமானது. எங்கேயும்,எப்போதும் இதனைச் செய்யலாம். பக்தி மட்டும் அவசியம்.

பூஜைக்கு வைத்திருக்கும் பாலை பூனை குடித்து விட்டால் தப்பில்லை. பயிரைக்கூட மாடு மேய்ந்து விடலாம். மனிதனுக்கு மட்டும் பகுத்தறிவு என்னும் சிந்தனாசக்தி இருக்கிறது. சரியான செயலைச் செய்ய முயல வேண்டும். தவறிச் செய்தால், தவறுக்கு தண்டனையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

கடவுளிடம் நமக்கு வேண்டியதை உரிமையோடு கேட்டுப் பெறுவதில் தவறு ஒன்றுமில்லை. குழந்தை தன் தாயிடம் கேட்பது போலத் தான் இதுவும். கேட்டது கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் கடவுளைப் பழிப்பது கூடாது.

நமக்கு என்ன தகுதியோ அதை நிச்சயம் கடவுள் அருள்வார் என்ற உறுதியான எண்ணம் நமக்கு இருந்தால் பக்திமார்க்கத்தில் இருந்து விலகமாட்டோம்.
-சொல்கிறார் ஹரிதாஸ்கிரி சுவாமி

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் பஞ்சபூதம் அல்லது பிரபஞ்சம் என்கிறோம். பிரபஞ்சம் என்றால் ... மேலும்
 
கண்ணப்ப நாயனார் சிவனுக்கு கண்கொடுத்த தலம் காளஹஸ்தி. இங்குள்ள சுவாமி காளத்திநாதர். இவரது கண்ணில் ... மேலும்
 
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். நாணாக (கயிறாக) இருந்த வாசுகியால் ... மேலும்
 
விநாயகர், முருகன், அம்பிகை, பிரம்மா, விஷ்ணு, தேவர்கள் என அனைவரும் சிவபூஜை செய்து அருள் பெற்றுள்ளனர். ... மேலும்
 
‘பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா’ என்று சிவனைப் பாடினார் சுந்தரர். சுந்தரரின் முதல் பாடல் இது தான். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar