பதிவு செய்த நாள்
05
செப்
2018
12:09
ஈரோடு: ஈரோட்டில், 100 ஆண்டுகளுக்குப் பிறகு புனரமைக்கப்பட்ட தெப்பக்குள கும்பாபிஷேக விழா தொடங்கியது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான, ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ் வரர், கஸ்தூரி அரங்கநாதர் பெருமாள் கோவில், மகிமாலீஸ்வரர் கோவில்களுக்கு சொந்த மான தெப்பக்குளம், கபாலீஸ்வரர் கோவில் பின்பகுதி தெப்பக்குள வீதியில் இருந்தது. காலப்போக்கில் மறைந்தது.
இதனால், கோவில்களின் தெப்ப உற்சவம், தற்காலிகமாக அமைக்கப்படும் தொட்டிகளில் நடந்தது. நூறு ஆண்டுகளுக்கு முன், பழைய தெப்பக்குளம் இருந்ததாக கூறப்படும் இடத்தில், புனரமைப்பு செய்து, புதிய குளம் உருவாக்கப்பட்டது. பணிகள் முடிந்த நிலையில், நாளை (செப்., 6ல்) கும்பாபிஷேகம் நடக்கிறது.
இந்நிலையில் யாகசாலை பூஜை நேற்று (செப்., 4ல்) தொடங்கியது. கணபதி ஹோமம், நவகிரஹ ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேகபலி, பூர்வாங்க பூஜைகள் நடந்தன. பின், யாக சாலையில் வைத்திருந்த கும்ப கலசத்துக்கு சிறப்பு பூஜை, பூர்ணாஹூதி, மஹா தீபாராதனை நடந்தது. கபாலீஸ்வரர் கோவில் சிவாச்சாரியார்கள், பெருமாள் கோவில் பட்டாச்சார்யார்கள் வேத மந்திரங்கள் முழங்கினர்.