விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பக்திபரவசத்துடன் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
விநாயகர் சதுர்த்தியையொட்டி உடுமலை வ.உ.சி.வீதி வினைதீர்க்கும் விநாயகர் கோவிலில் தங்ககவசத்தில் விநாயகர் காட்சியளித்தார். விழுப்புரம் கிழக்கு பான்டி ரோட்டில் உள்ள ஸ்ரீராஜகணபதி ஆலயத்தில் மூலவர் விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். உடுமலை காந்திநகர் வரசித்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் காட்சியளித்தார். விநாயகர் சதுர்த்தியையொட்டி உடுமலை சக்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த விநாயகர். கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் முத்தங்கி அலங்காரத்தில் அருள் பாலித்த விநாயகர். பக்திபரவசத்துடன் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.