பதிவு செய்த நாள்
14
செப்
2018
12:09
தேனி: விநாயகர் சிலை ஊர்வலகங்களுக்கு, உயர்நீதிமன்றம் ஒற்றை சாளர முறையில் அனுமதி அளித்ததால் தேனியில் கடந்த ஆண்டை விட, சிலைகள் குறைவாக வைக்கப் பட்டுள்ளன. இருப்பினும் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் கடந்தாண்டு விநாயகர் சிலை ஊர்வலத்திற்கான அனுமதியில், ஒற்றை சாளர முறை (சிங்கிள் விண்டோ சிஸ்டம்) அமல்படுத்தவில்லை. மாவட்டத்தில் 730 விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு, 10 இடங்களில் ஊர்வலம் நடத்தப்பட்டது.
பெரியகுளம், கூடலூர், கம்பம், சின்னமனூர், ஆண்டிபட்டி, தேனி, கோம்பை, தேவாரம் உள்ளி ட்ட எட்டு இடங்களில் மாவட்ட நிர்வாகம் அனுமதித்த ஆற்றங்கரை பகுதிகளில் கரைக்கப்பட உள்ளது.
மாவட்ட போலீஸ் நிர்வாகத்திடம் அனுமதி பெற்று சுவாமி சிலைகள் 656 இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. இந்து முன்னணி சார்பில் மாவட்டத்தில் 144 இடங்களிலும், இந்து எழுச்சி முன்னணி சார்பில் 225 இடங்களிலும் சிலைகள் வைக்கப் பட்டுள்ளன. இந்து அமைப்புக்கள், பொதுமக்கள், இந்து சமய இயக்கங்கள், தன்னார்வல இந்து இளைஞர் அமைப்புக்கள் சார்பில், 723 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இன்று தேனி கம்பம் உள்ளிட்ட பகுதியில் நடக்க உள்ளது. டி.எஸ்.பி.,க்கள் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டள்ளனர்.