சிங்கம்புணரி:சிங்கம்புணரி அருகே மு.சூரக்குடி கிராமம் எஸ்.கோவில்பட்டியில் செகுட்டையனார் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. செப். 10 ம் தேதி கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கி நான்கு கால பூஜையாக நடந்தது. நேற்று(செப்.,13ல்) காலை 9:00 மணிக்கு கடம் புறப்பாடு நடந்தது.
சிவாச்சாரியார்கள் புனித நீர் கலசங்களை சுமந்து சென்றனர். காலை 10:00 மணிக்கு செகுட்டையனாருக்கும், கருப்பர் உள்ளிட்ட பரிவார தேவதைகளுக்கும் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. சிவகங்கை தேவஸ்தான மதுராந்தகி நாச்சியார், கோயில் கவுரவ கண்காணிப்பாளர் ஆனந்தகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.