சேந்தமங்கலம்: ஆண்டாள் சூடிய மாலை, சேந்தமங்கலம் கொண்டு வரப்பட்டு பெருமாளுக்கு சூடப்பட்டது. சேந்தமங்கலத்தில், லட்சுமி நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில் பெருமாளுக்கு, ஆறாண்டுகளாக ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிய மாலை கொண்டு வரப்பட்டு அணிவிக்கப் படுகிறது. இதையொட்டி சிறப்பு பால்குட ஊர்வலமும் நடக்கும். இந்தாண்டு பால்குட ஊர்வலம் நேற்று செப்.,14ல் நடந்தது.
தொடர்ந்து மகா விஷ்ணு, மகாலட்சுமி, கருடாழ்வார் ஆகிய மூன்று தெய்வங்களுக்கு அபிஷே கம், தீபாராதனை நடைபெற்றது. மேலும், ஸ்ரீ வில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிய மாலை ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு, லட்சுமி நாராயண பெருமாளுக்கும், ஸ்ரீரங்கத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட மாலை, மகாலட்சுமி தாயாருக்கும் அணிவிக்கப் பட்டது. முன்னதாக, செண்டை மேளம் முழங்க மாலைகள் ஊர்வலமாக முக்கிய வீதி வழியாக கொண்டு செல்லப் பட்டன.