பதிவு செய்த நாள்
15
செப்
2018
03:09
பொதட்டூர்பேட்டை:ஆறு நாட்களாக நடந்து வந்த, அம்மன் ஜாத்திரை திருவிழா கொண்டா ட்டம், நேற்று (செப்., 14ல்) மாலை, பக்தர்களின் ரத அணி வகுப்புடன் நிறைவு பெற்றது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப்., 9ல்) மாலை, எல்லை பொங்கலுடன் துவங்கிய அம்மன் ஜாத்திரை துவங்கியது, ஆர்.கே.பேட்டை கிராமத்தில், செவ்வாய்க்கிழமை இரவு கும்பம் படைக்கப்பட்டது. பொதட்டூர்பேட்டையில், புதன்கிழமை பகலில், அம்மனுக்கு கும்பம் படைக்கப்பட்டது.
கும்பத்துடன் ஊர்வலமாக வந்த பக்தர்கள், வேப்பிலை ஆடை அணிந்து, மாவிளக்கும் கொண்டு சென்று அம்மனுக்கு நேர்த்திக்கடனை செலுத்தினர். பலர், தங்களின் வேண்டுதல் படி, ஆடு, கோழிகளை அம்மனுக்கு பலியிட்டனர்.
நேற்று (செப்., 14ல்) மாலை, பொதட்டூர்பேட்டையில், பக்தர்கள், வேடம் அணிந்து பல்வேறு ரதங்களில் வீதியுலா வந்தனர்.ஆறு நாட்களாக கோலாகலமாக நடந்து வந்த ஜாத்திரை, நேற்றுடன் நிறைவு பெற்றது.