ஷீரடி சாய்பாபா பாதுகை: திருப்பூர் பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16செப் 2018 12:09
திருப்பூர்: திருப்பூர் யுனிவர்சல் ரோட்டில் உள்ள சீரடி சாய்பாபா கோயிலில் உள்ள சீரடி சாய்பாபாவின் பாதகையை தரிசனம் செய்த பக்தர்கள்.
ஷீரடி சாய்பாபா பாதுகை திருப்பூர் வந்தது. ஷீரடி சாய்பாபா சமாதி நூற்றாண்டு விழாவையொட்டி, மகாராஷ்டிரா மாநிலம், ஷீரடியில் உள்ள சாய்பாபா கோவிலில் இருந்து, அவருடைய பாதுகை ஊர்வலமாக இந்தியாவின் அனைத்து பாபா கோவில்களுக்கும் கொண்டு செல்லப்படுகிறது. இதன் படி, திருப்பூர் யுனிவர்சல் ரோட்டில் உள்ள சீரடி சாய்பாபா கோவிலுக்கு பாபா பாதுகை வந்தது. காலை, 8:00 மணிக்கு, விஷேச பூஜை நடத்தப்பட்டு, பக்தர்கள் பார்வைக்கு புனித பாதுகை வைக்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து பாதுகையை வழிபட்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, ஷீரடி சாய் சாரிடபிள் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்திருந்தனர்.