புதுச்சேரி வலம்புரி விநாயகர் கோவிலில் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16செப் 2018 12:09
புதுச்சேரி: நெல்லித்தோப்பு வலம்புரி விநாயகர் கோவிலில் திருக்கல்யாண வைபவம் நடந்தது. நெல்லித்தோப்பு அண்ணா நகர் 8வது குருக்குத் தெருவில் உள்ள சர்வசித்தி வலம்புரி விநாயகர் கோவிலில், விநாயகர் சதுர்த்தி விழா, 13ம் தேதி துவங்கியது. இதையொட்டி, அன்று காலை 7 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, வலம்புரி சங்கு மற்றும் கலச ஸ்தாபனம் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் மாலை 7.15 மணிக்கு சித்தி புத்தி சமேத சர்வசித்தி வலம்புரி விநாயகருக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதில் விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.