Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இந்த வாரம் என்ன மறந்து போன விஷயம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நன்மையின் கதவு திறக்கட்டும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 செப்
2018
04:09

முயலாமை, இல்லாமை, இயலாமை இவற்றை  விட கொடியது பொறாமை. இந்த ஆமை ஒருவனது மனதிற்குள் நுழைந்தால் நிம்மதி அடியோடு போய்விடும்.  அப்படித்தான் ஒருவர் வாழ்விலும் நடந்தது. அவனுடைய எதிர்வீட்டுக்காரர் வசதியுடன் வாழ்வதாக எண்ணி பொறாமைப்பட்டான். அவனுக்கு ஒரு மடங்காக கிடைக்கும் ஒரு பொருள், எதிர்வீட்டுக் காரருக்கு இரு மடங்காக கிடைத்துக் கொண்டிருந்தது. வருவது வரட்டும், போவது போகட்டும் என  சந்தோஷமாக இருக்க தெரியவில்லை. தனக்கு ஒரு மடங்காக கிடைக்கும் நன்மை, அவனுக்கு இரு மடங்காக கிடைக்கிறதல்லவா... இதே போல ஒரு மடங்கு தீமை கிடைத்தால், அதுவும் அவனுக்கு இரு மடங்காகத் தானே கிடைக்கும் என நினைத்தான். நன்மை, தீமை கணக்கை பார்த்தவனுக்கு, தன்னுடைய அறிவு எத்தனை மடங்கு வேலை செய்கிறது என பார்க்கத் தெரியவில்லையே... தன்னுடைய ஒரு கண் குருடாக வேண்டும் என கடவுளிடம் வேண்டினான்.  பொறாமையின் தீமையை உணர்த்த இதை விட நல்ல வாய்ப்பு  கிடைக்காது என கடவுள் நினைத்து  அப்படியே செய்தார். மறுநாளே ஒரு கண்ணில் பார்வை போனது. ஒரு கண் போன வலியை கூட  அவன் பொருட்படுத்தாமல்,  எதிர்வீட்டுக்காரருக்கு இரு கண்களும் பறிபோகும் என காத்திருந்தான். ஆனால் அவருக்கு கண்கள் இருந்ததோடு பார்வையிலும் தெளிவு இருந்தது.  அதைக் கண்ட பொறாமைக்காரன் புழு போல துடித்தான்.  கடவுளிடம் மன்றாடினான். ""கடவுளே! ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்கிறது? சிரித்தபடி கடவுள் ""மகனே... உனக்கு மட்டுமில்லை; பொறாமை கொண்ட யாருக்கும் இதுவே நடக்கும். உன் பொறாமையிலிருந்தே நன்மை, தீமையின் பலம் மற்றும் பலவீனத்தை தெரிந்து கொள்.  மனதில் நல்லது நினைத்தால் அது மற்றவருக்கும் நன்மை தரும்; மற்றவருக்கு நீ கெடுதல் நினைத்தால் மற்றவரது தீமையும் உனக்கே திரும்பும். அதனால் மனதில் எப்போதும் நன்மையின் கதவு மட்டும் திறந்திருக்கட்டும். எல்லாம் நல்லதாக அமையும் என்றார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் பஞ்சபூதம் அல்லது பிரபஞ்சம் என்கிறோம். பிரபஞ்சம் என்றால் ... மேலும்
 
கண்ணப்ப நாயனார் சிவனுக்கு கண்கொடுத்த தலம் காளஹஸ்தி. இங்குள்ள சுவாமி காளத்திநாதர். இவரது கண்ணில் ... மேலும்
 
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். நாணாக (கயிறாக) இருந்த வாசுகியால் ... மேலும்
 
விநாயகர், முருகன், அம்பிகை, பிரம்மா, விஷ்ணு, தேவர்கள் என அனைவரும் சிவபூஜை செய்து அருள் பெற்றுள்ளனர். ... மேலும்
 
‘பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா’ என்று சிவனைப் பாடினார் சுந்தரர். சுந்தரரின் முதல் பாடல் இது தான். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar