சீனாவில் ஒரு காலத்தில் இளைஞர்கள் பெண்ணாசையில் சிக்கி சீரழிந்தனர். அப்போது அங்குள்ள பாதிரியார் ஒருவர்,""நாம் நம்முடைய குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க மறந்து போன ஒரு விஷயம் இருக்கிறது. அது தான் ஆன்மிக வாழ்க்கை. ஆன்மிக ரகசியங்களை அவர்கள் அறிந்திருந்தார்கள் என்றால், இப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருக்காது. அந்த உண்மையான சந்தோஷம் பற்றி அறியாததால் தான் வாலிபர்கள் சிற்றின்ப வாழ்வில் ஈடுபடுகின்றனர் என்றார். இந்த சிந்தனை ஒழுக்கம் கெட்டுப்போன எந்த நாட்டுக்கும் பொருந்தும். தற்கால நாகரிகத்தால் இறையுணர்வை ஒரு பொருட்டாக மதிக்காமல், இளைஞர்கள் தறிகெட்டு போய்க் கொண்டிருக்கிறார்கள். ஆனால், கடவுள் தம் தெய்வீகத்தை தந்து நம்மை அவருடைய ஆவியினால் நிரப்ப ஆவலாய் இருக்கிறார். அவர் கொடுக்கும் தண்ணீர் ஜீவத்தண்ணீர். அவர் கொடுக்கும் அபிஷேகம் ஜீவநதி. வேதத்தின் கடைசி அத்தியாயத்தில், ""தாகமாய் இருக்கிறவன் வரக்கடவன். விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக் கொள்ளக் கடவன்” என்று கடவுள் அழைக்கிறார்.