ஆரம்ப நிலையில் மாண வர்கள் எல்லாப் பாடங்களும் படிப்பர். மேல்நிலை வகுப்பில், விருப்பப்பாடத்தை ஆழ்ந்து படிப்பர். இது போல பக்தர்கள் ஆரம்பத்தில் பல தெய்வங்களை வழிபடுவர். காலம் செல்லச் செல்ல ஒரே தெய்வத்தின் மீது ஈடுபட்டு மனம் பக்குவம் பெறும். இஷ்ட தெய்வத்தை வழிபட்டால் மனம் சீர்படும். ஒருமுகப்பட்ட சிந்தனையால் பணி சிறக்கும். எண்ணியது நிறைவேறும். யாரை வேண்டுமானாலும் இஷ்டதெய்வமாக பூஜிக்கலாம். ஆனால் பலன் ஒன்றே. இது உங்கள் சாய்ஸ் தான்.