பூஜையின் போது கோயிலில் கண்டாமணி சப்தமாக ஒலிப்பதால் மற்ற சப்தங்கள் மேலெழும்பாது. ஆசையில் சிக்கி தவிக்கும் நம்மை, அழைக்கும் விதமாக மணியோசை உள்ளது. புறவுலகை மறந்து வழிபாட்டில் மனம் ஈடுபட இது துணைசெய்கிறது. ஒலித்தத்துவமாக கடவுள் இருப்பதை ஓசை ஒலியெலாம் ஆனாய் போற்றி என்கிறது தேவாரம். மணியோசை எழுப்பும் இடத்தில் தீயசக்திகள் அண்ட முடியாது. வீட்டு வழிபாட்டிலும் மணியோசை ஒலிப்பது நல்லது.