பதிவு செய்த நாள்
18
செப்
2018
10:09
திண்டுக்கல்; திண்டுக்கல் தென் திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் பக்த ஆஞ்சநேயருக்கு லட்சார்ச்சனை பெருவிழா நடந்தது. புரட்டாசி மாத பிறப்பையொட்டி பக்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் லட்சார்ச்சனை நடந்தது. இரவு மகா தீபாராதனை, தீர்த்தம் பூஜை நடந்தது. வெங்கடாஜலபதி பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள், அலங்காரம், தீபாராதனையும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
புரட்டாசி வழிபாடு: பழநி: புரட்டாசி மாதபிறப்பை முன்னிட்டு, பழநி முருகன் மலைக்கோயிலில் சிறப்பு யாகபூஜை நடந்தது. பழநி மலைக்கோயிலில் புரட்டாசி மாதபிறப்பை முன்னிட்டு, ஆனந்தவிநாயகருக்கு கும்பகலசங்கள் வைத்து, கணபதிஹோமத்துடன், யாகபூஜை நடந்தது. விநாயகருக்கு புனித கலசநீரில் அபிஷேகம் செய்து, லட்டு படைக்கப்பட்டு, வெள்ளிக்கவச அலங்காரத்தில், தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. மேலும் திருஆவினன்குடிகோயில், பெரியநாயகியம்மன் கோயில், லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில், பெரியாவுடையார் உள்ளிட்ட கோயில்களில், பெருமாள், அம்மன், சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரத்தில், தீபாராதனை நடந்தது.