வாரணாசி: வாரணாசி காசி விஸ்வநாதர் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார். தனது பிறந்த நாளையொட்டி வாரணாசி சென்றிருந்த பிரதமர் மோடி அங்கு பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினார். பின்னர் காசிவிஸ்வநாதர் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்தார். இவ்வழிபாட்டில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் கலந்து கொண்டார்.