பழநியில் முருகன் ஆண்டிக் கோலத்தில் மேற்கு திசை நோக்கி வீற்றிருக்க, திண்டுக்கல்லில் இருந்து 22 கிலோ மீட்டர் தொலைவான மலைப்பகுதியில் உள்ள திருமலைக்கேணி முருகனோ கிழக்கு திசையை நோக்கி ஆண்டிக் கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதனால் இந்தக் கோயிலை வாரியார் ‘கீழ்பழனி’ என்று அழைத்து சிறப்பித்தார்.