வட மாநிலங்களில் கிருஷ்ணரை ‘சோர்’ என்றே அழைப்பார்கள். சோர் என்றால் மகா திருடன் என்று பொருள். பக்தர்களின் மனங்களைத் திருடியவன் ‘கிசோர்’ என்றும், பக்தனுக்காகப் பாலைத் திருடியதால் ‘க்ஷீர்சோர்’ என்றும், துவாபரயுகத்தில் வெண்ணெயைத் திருடியதால் ‘நானிசோர்’ என்றும், கோபிகைகளின் துணிகளைத் திருடியதால் ‘வஸன்சோர்’ என்றும், பக்தர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டதால் ‘சித்த சோர்’ என்றும் பெயர் பெற்றார். கிருஷ்ணர் பல யுகங்களாக கள்வனாக இருந்து லீலைகள் பல புரிந்ததால் அவர் ‘ஹரணா ’ என்று பெயர் பெற்றார். அதிலிருந்து வந்த பெயர்தான் ‘ஹரி என்பதாகும்.