வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டத்தில அபிதகுஜாம்பாள் சமேத அர்த்தநாரீஸ்வரர் கோயில் உள்ளது. கருவறையில் உள்ள லிங்கமூர்த்தியின் பாணம் செந்நிற தோற்றத்தில் காணப்படுகிறது. அம்பிகை மூன்றடி உயரத்தில் வீற்றிருக்கிறாள். கணவன் - மனைவியரிடையே ஏற்படும் பிணக்குகளைப் போக்கி அன்யோன்யத்தை ஏற்படுத்தும் அற்புதத் தலம் இது. அர்த்தநாரீஸ்வரருக்கு 11 நெய் தீபங்களும், அம்பிகைக்கு 5 நெய் தீபங்களும், விநாயகப் பெருமானுக்கு 5 நெய் தீபங்களும், முருகப்பெருமானுக்கு 6 நெய் தீபங்களும் நித்ய பிரதோஷ காலத் திலோ பிரதோஷத்தன்றோ ஏற்றி அர்ச்சனை செய்தால், மனக் கசப்புகள் நீங்கி நல்லிணக்கம் ஏற்படும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.