பதிவு செய்த நாள்
22
செப்
2018
12:09
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வைகை ஆற்றில் குப்பைக்குநடுவே புதரில் பழங்கால புராதன எட்டு கற்சிலைகளை மர்ம நபர்கள் வீசிச் சென்றுள்ளனர்.
பரமக்குடி காக்காதோப்பு வைகை ஆற்று பகுதி குப்பை பகுதியில் நேற்று (செப்., 21ல்) காலை 9:00 மணிக்கு சிலர் சுவாமி கற்சிலைகள் கிடப்பதை பார்த்தனர். துணை தாசில்தார் வரதன், வி.ஏ.ஓ., க்கள் ரத்தினேஸ்வரன்,ஈஸ்வரமூர்த்தி மற்றும் டி.எஸ்.பி., சதீஸ்குமார் உள்ளிட்டோர் சிலையை பார்வையிட்டனர்.
இதில் 3 அடி உயரமுள்ள பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி தாயார், பிரம்மன், சரஸ்வதி, இரண்டு பரிவார அம்மன் சிலைகள், விஷ்ணுதுர்க்கை சிலைகள் என கண்டெடுக்கப்பட்டன.
தாசில்தார் பரமசிவம் கூறிய போது: சிலைகள் அனைத்தும் அழகாக உள்ளன. இவைகள் குறித்து மாவட்ட கலெக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவரின் உத்தரவின் பேரில்
அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்படும், என்றார்.