மதுரை: பெண்களிடம் கொலு பொம்மைகளை அழகுப்படுத்தும் திறன் உள்ளதால் அவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுவதுடன், வயதில் மூத்தவர்களை மதிக்கும் பண்பும் வளர்கிறது. பெரும்பாலும் களி மண்ணால் செய்த பொம்மைகளை கொலுவில் இடம் பெற செய்து, கைவினை கலைஞர்களுக்கு வாழ்வளிப்பதோடு, சிறுதொழிலை ஊக்குவிக்கும் திருப்தியும் ஏற்படுகிறது. விஞ்ஞான ரீதியாக கொலு வைப்பது குடும்பத்திற்கு நன்மையை யும் தருகிறது. அக்டோபர் 10 - 19ம் தேதி வரை நடக்கும் நவராத்திரியில் கொலுவை அலங்கரிக்க விரும்புவோர் தாங்கள் விரும்பிய அழகில் சுவாமி, அம்பாள் பொம்மைகளை மதுரை தானப்பமுதலி தெரு, மீனா கைவினை பொருள் விற்பனை நிலையத்தில் வாங்கலாம்.
கடை உரிமையாளர் சி.மது: இந்த ஆண்டு வந்துள்ள பொம்மைகளில் "பைபர் மெட்டல் பொம்மைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இவை உறுதி தன்மையுடன் நீண்ட காலத்திற்கு உழைக்கும், பொம்மைகள் அனைத்தும் நவராத்திரி கொலுவிரில் வைப்பதற்கு ஏற்ப ஆகம விதிப்படி அமைந்துள்ளது. பொம்மை 30 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. நவராத்திரி துவங்க உள்ள நிலையில் அமெரிக்கா, சவுதிஅரேபியா இங்கிலாந்தில் வசிக்கும் தமிழர்கள் அதிகளவில் வாங்கிச்செல்கின்றனர் என்றார். கொலு பொம்மைகள் அறிய 94431 89179.