பதிவு செய்த நாள்
23
செப்
2018
11:09
திண்டுக்கல்:திண்டுக்கல், பழநி உட்பட பல்வேறு பகுதிகளிலும் நேற்று புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. திண்டுக்கல் மலையடிவாரம் சீனிவாச பெருமாள் கோயிலில் புஷ்பாஞ்சலி விழா நடந்தது. பெருமாளுக்கு திருமஞ்சன அபிேஷகம், அலங்காரம், புஷ்பாஞ்சலி பூஜையும்,மாலையில் சிறப்பு பூ அலங்காரம், தீபாராதனை நடந்தது. தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. திண்டுக்கல் எம்.வி.எம்., நகர் தென் திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாள், பக்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிசேஷகம், பூஜை நடந்தது. பாண்டுரங்க பெருமாள் அலங்காரத்தில் சுவாமி காட்சி கொடுத்தார். மேற்கு ரத வீதி வீரஆஞ்சநேயருக்கும் சிறப்பு அபிேஷகம், அலங்காரம், பூஜைகள்நடந்தது.
பழநி: பழநி மேற்குரதவீதி லட்சுமி நாராயணப்பெருமாள் கோயிலில் காலை 6:00 மணிக்கு பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மலர் அலங்காரம், துளசி அர்ச்சனை செய்யப்பட்டது. ஆஞ்சநேயர் சன்னதி, சக்கரத்தாழ்வார் சன்னதியில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. காந்தி மார்க்கெட் வேணுகோபால சுவாமி கோயில், பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள், கண்ணாடி பெருமாள் மற்றும் பாலாறு - -பொருந்தலாறு வீர ஆஞ்சநேயர் கோயிலில், ராமநாதநகர் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில்களில் திரளான பக்தர்கள் வழிபட்டனர்.
சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே வி.மேட்டுப்பட்டி கதிர்நரசிங்க பெருமாள் கோயிலில் பஜனை, சொற்பொழிவு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. சுவாமிக்கு 16 வகை அபிேஷகங்கள் நடந்தன. மலர் அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூமா தேவி சமேதம் எழுந்தருளிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் தீபாராதனை நடந்தது. வளாகத்தில் உள்ள மண்டபத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது. நத்தம் கோவில்பட்டி வேணுகோபால சுவாமி கோயிலிலும் நடந்த சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.