மதுரை: மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் புரட்டாசி திருவிழா தெப்ப உற்ஸவம் நடந்தது. செப்.,13 கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தினமும் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தார். விழாவின் 11 ம் நாளான நேற்று காலை 10:30 மணிக்கு தெப்பத்தில் தோளுக்கினியால் அலங்காரத்தில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் எழுந்தருளினார். மாலை 6:00 மணிக்கு ஊழியர்கள் முட்டுத்தள்ள தெப்பத்தை மூன்று முறை சுற்றி, பெருமாள் வலம் வந்தார். இன்று (செப்.,24) காலை உற்சவ சாந்தி பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது. தக்கார் வெங்கடாசலம், செயல் அலுவலர் மாரிமுத்து மற்றும் அலுவலர்கள் விழா ஏற்பாடுகளை செய்தனர்.