பதிவு செய்த நாள்
24
செப்
2018
11:09
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று ஏக தின பிரம்மோற்சவத்தை முன்னிட்டு உற்சவர் பெருமாள் சிறப்பு சேவையில் அருள்பாலித்தார். பண்ருட்டி, திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசியை முன்னிட்டு, மூலவர் பெருமாள், திருப்பதி திருமலை வெங்கடேச பெருமாள் அலங்காரத்தில் நெய்தீப தரிசனத்தில் பக்தர்களுக்கு மாதம் முழுவதும் அருள்பாலிக்கிறார்.
நேற்று ஏகதின பிரம்மோற்சவத்தை முன்னிட்டு அதிகாலை 5:00 மணிக்கு சுப்ரபாதம், 6:00 மணிக்கு தோமாலை சேவை, 7:30 மணிக்கு கொடியேற்றம், 8:15 மணிக்கு உற்சவர் பெருமாள் அம்சவாகன சேவை, 9:00 மணிக்கு சிம்ம வாகன சேவை, 10:00 மணிக்கு அனுமந்த வாகன சேவை, 11:00 மணிக்கு சேஷவாகனத்தில் பெருமாள் ஸ்ரீதேவி, பூமிதேவி சகிதமாக அருள்பாலித்தார். மதியம் 12:00 மணிக்கு கருட வாகன சேவை, பிற்பகல் 3:00 மணிக்கு யானை வாகன சேவை, மாலை 4:00 மணிக்கு சூர்ணோற்சவத்தில் ஸ்ரீதேவி, பூமிதேவி சகிதமாக பெருமாள் அருள்பாலித்தார். மாலை 5:00 மணிக்கு குதிரை வாகன சேவை, மாலை 6:00 மணிக்கு திருத்தேர் உற்சவம், இரவு 7:00 மணிக்கு தீர்த்தவாரி, 7:30 மணிக்கு கொடியிறக்கம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.