பதிவு செய்த நாள்
24
செப்
2018
11:09
ஈரோடு: கோவிந்தா கோஷம் முழங்க, குதிரை வாகனத்தில், நம்பெருமாள் வலம் வந்தார்.
ஈரோடு, கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவில் தேர்த்திருவிழா, ஒன்பதாம் நாள் நிகழ்ச்சியில, நம்பெருமாள் குதிரை வாகனத்தில், நகர்வலம் வந்தார். முன்னதாக விழா மண்டபத்தில் சேவை சாதித்த பெருமாள், இரவு, 9:45 மணிக்கு, குதிரை வாகனத்தில் நகர்வலம் புறப்பட்டார். ராஜகோபுரம் வழியாக வந்த பெருமாளுக்கு, சிறப்பு பூஜை, தீபாராதனை காட்டப்பட்டது. அதை தொடர்ந்து, ஈஸ்வரன் கோவில் வீதி, மணிக்கூண்டு, கனி மார்க்கெட், பி.எஸ்., பார்க், பிரப்ரோடு, பெரியமாரியம்மன் கோவில், காமராஜர் வீதி, வழியாக நள்ளிரவு, 12:00 மணிக்கு கோவிலை அடைந்தார். வழி நெடுகிலும், ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பெருமாளை வரவேற்கும் விதமாக, வாசலில் கோலமிட்டு, பழம், தேங்காய் உடைத்து வழிபட்டனர். குதிரை வாகனத்தை பின் தொடர்ந்த பக்தர்கள், கோவிந்தா கோஷம் எழுப்பியபடி வந்தனர். நகர்வலம் முடியும் வரை, மாநகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது.