நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் சொக்கநாதர் கோவிலில் அனந்தபத்மநாப சுவாமி நோன்பு விரதபூஜை நடந்தது. சி.என்.பாளையம் சொக்கநாதர் கோவிலில் நேற்று அனந்தபத்மநாப சுவாமி நோன்பு பூஜை நடந்தது. இதையொட்டி, காலை 8:00 மணிக்கு சொக்கநாதர் கோவிலில் பக்தர்கள் கலச பூஜை செய்து, கலசத்திற்கு பின்னப்பூ மற்றும் பிற பொருட்களால் அர்ச்சனை செய்து வழிபட்டனர். பின்பு கலசத்திற்கு முன் பகுதியில் தன்னை தானே 14 முறை சுற்றி பூஜை செய்தனர். 9:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்து அனைவரும் நோன்பு கயிறு கட்டிக்கொண்டு வீட்டிற்கு பூஜை செய்து வழிபட்டனர்.