பதிவு செய்த நாள்
25
செப்
2018
11:09
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவிலில் தினமும், 75 பேருக்கு வழங்கப்படும் அன்னதானத்தை, விசேஷ நாட்களில் அதிகமானோருக்கு வழங்க வேண்டும் என்ற கோரி க்கை எழுந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்த மான, 1,389 கோவில்களில், 30க்கும் மேற்பட்ட கோவில்களில், தமிழக அரசின், நித்திய அன்ன தான திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இதில், காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில், ஒரு நாளைக்கு, 75 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
காஞ்சியில் உள்ள வைணவ கோவில்களில் பெரிய கோவில் என்பதால், நாள்தோறும் கோவி லுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சனிக்கிழமை, உற்சவம் உள்ளிட்ட விசேஷ நாட்களில், பக்தர்களின் கூட்டம் மேலும் அதிகரிக்கிறது. இதனால், வெளியூரில் இருந்து வரும், 100க்கும் மேற்பட்டோர் அன்னதானம் கூடம் அருகே சாப்பிட காத்திருக்கின்றனர்.கதவு திறந்ததும் முண்டியடித்து உள்ளே சென்று, இடத்தை பிடிக்கும், 75 நபர்களுக்கு மட்டுமே அன்னதானம் வழங்கப்படுகிறது.
இடம் கிடைக்காதவர்கள் வெளியேறிய பின், கதவு பூட்டப்படுகிறது. இதனால், இடம் கிடைக்காதவர்கள் அன்னதான கூடத்தில் இருந்து வெளியே வந்து, மீண்டும் அழைப்பார்களா என, ஏக்கத்துடன் காத்திருந்து, பின் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். எனவே, விசேஷ நாட்களில், அன்னதானம் வழங்கும் நபர்களின் எண்ணிக்கையை, 75லிருந்து, அதிகரிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.