வில்லியனூர் பெருமாள் கோவிலில் திருக்கல்யாண மகோற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06பிப் 2012 11:02
புதுச்சேரி : வில்லியனூர் வரதராஜப்பெருமாள் கோவிலில் திருக்கல்யாண மகோற்சவம் நடந்தது. வில்லியனூர் வரதராஜப்பெருமாள் கோவிலில் 23ம் ஆண்டு திருக்கல்யாண மகோற்சவம் காலை 9 மணிக்கு திருமஞ்சனத்துடன் துவங்கியது. இதனையொட்டி மாலை 6 மணிக்கு பெருமாள் தாயார் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. 7 மணிக்கு நடந்த விழாவில் வரதராஜபெருமாள்-பெருந்தேவியார் மணக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 8 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. நிகழ்ச்சியில் சிறப்பு அதிகாரி ஹரி ஹரி நமோ நாராயணா, முன்னாள் துணை தலைவர் வெங்கடாசலம் யாதவ் மற்றும் கோவில் அர்ச்சகர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.