சிவன் கோயில் கருவறைகளில் ஐந்து தீபங்கள் ஒரு வரிசையில் அமைவது, ‘கால தீபம்’ எனப்படும். இவை, பிரதிஷ்டா கலை, நிவர்த்தி கலை, வித்யா கலை, சாந்தி கலை, சாந்தியாதீத கலை என ஐந்து கலைகளாகும். இந்த ஐந்து கலைகளும் ஆன்மாவில் சிவத்தை எழுந்தருள வைத்து, அதனை சிவமாகவே ஆக்குகின்றன.