பதிவு செய்த நாள்
01
அக்
2018
12:10
திருத்தணி: திருத்தணியில் நடந்த, கிருஷ்ணர் கல்யாண உற்சவ விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை வழிபட்டனர்.திருத்தணி - - அரக்கேணம் சாலை, சுப்ரமணியபுரத்தில் கிருஷ்ணர் கல்யாண உற்சவ விழா, நேற்று வெகு விமரிசையாக நடந்தது. இதில், உற்சவர் கிருஷ்ணருக்கு பால், தயிர், தேன், பன்னீர், இளநீர், மஞ்சள், சந்தனம், போன்ற பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.தொடர்ந்து, மலர் அலங்காரம், தீபாராதனைக்கு பின், கல்யாண மாலை பூஜை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை, நெமிலி குருக்கள் ரங்கநாதன் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர். முன்னதாக, பரிகார பூஜைகள் நடந்தன. இதில், திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை வழிபட்டனர்.ஒவ்வொரு மாதமும், கிருத்திகை விழா மறுநாள், ரோகிணி நட்சத்திரத்தில், கல்யாண உற்சவ பூஜை நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.