பொதுவாக அன்றாட வாழ்வில் நாம் உபயோகிக்கும் பொருட்களின் பெயருடன் இணைந்தும் பிள்ளையார் பெயர் பெறுகிறார். இதோ சில.... மிளகுப் பிள்ளையார் - சேரன்மாதேவி, கடுக்காய்ப் பிள்ளையார் - திருக்காறயில், அபரஞ்சி விநாயகர் - பழநி, கற்பூர விநாயகர் - சின்னதம்பிபாளையம் (சேலம்), சர்க்கரை விநாயகர் - பேட்டை (திருநெல்வேலி), சங்கு விநாயகர் - மானாமதுரை, சந்தன விநாயகர் -மதுரை, சாளக்ராம விநாயகர் - திருநல்லூர் (தஞ்சாவூர்), சொர்ண கணபதி - வேலூர், படிக்காக பிள்ளையார் - திருவீழிமிழலை, களஞ்சிய விநாயகர் -மயிலாடுதுறை, தேன் விநாயகர் - திருப்புறம்பியம், ரத்ன விநாயகர் - ஆர்.எஸ். புரம் (கோவை), மாணிக்க விநாயகர் - கதிர்காமம்.