மதுரை மாவட்டம், திருமங்கலம் பேரையூர் அருகில் மந்தக்கரை கிராமத்தின் ஏரிக்கரையில் உள்ள சிவசக்தி விநாயகர் கோயிலில் வலம்புரி விநாயகர் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இச்சிலையானது பூமியிலிருந்து தோண்டி எடுக்கப்பட்டது. பக்தர்கள் தங்கள் கோரிக்கைகளை ஒரு துண்டுச்சீட்டில் எழுதி வைத்துவிட்டு இவரிடம் பிரார்த்தனை செய்துகொண்டால், அது விரைவில் நிறைவேறும் என்பது நம்பிக்கை!