ஆந்திர மாநிலம், ராமகிரியில் அருளும் கால பைரவர் குழந்தை வரம் தரும் சந்தான பிராப்தியாக அருள்பாலிக்கிறார். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இங்கே வந்து வேண்டிக் கொள்கிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியதும் குழந்தையைக் கொண்டு வந்து பைரவருக்கு கொடுத்து விட்டு, பிறகு பைரவரின் வாகனமான நாய் உருவத்தை விலையாகக் கொடுத்து, குழந்தையை திரும்பப் பெற்றுச் செல்கிறார்கள். இங்கு சிவபெருமானின் சன்னிதிக்கு முன் நந்தி தேவருக்கு பதில் ஆஞ்சநேயர் காட்சி தருகிறார். இக்கோயிலில் பிரதோஷ வழிபாடு கிடையாது.