பதிவு செய்த நாள்
05
அக்
2018
12:10
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கோவிலுக்கு வரும் வெளியூர் யாத்ரீகர்கள் தங்குவதற்கு, வெள்ளக் குளம் பகுதியில், இலவச விடுதி உள்ளது.
காஞ்சிபுரத்தில் உள்ள முக்கியமான கோவில்களை காண, வெளியூர்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வருகின்றனர்.அவ்வாறு வரும் யாத்ரீகர்களுக்கு, தங்க வசதி இல்லாத நிலை உள்ளது. தனியார் விடுதிகளில், கட்டணம் அதிகம் வசூலிக்கப் படுகிறது.நகராட்சி சார்பில் கட்டப் பட்ட, யாத்ரீகர்கள் தங்கும் குறைந்த கட்டண விடுதியும், தனியாருக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது.இந்நிலையில், காஞ்சிபுரம், வெள்ளக்குளம் பகுதியில், தனியாருக்கு சொந்தமான இந்து தர்ம சத்திரம், கோவிலுக்கு வரும் யாத்ரீகர் களுக்கு, உதவியாக உள்ளது.இது குறித்து, அந்த விடுதியின் உரிமையாளர் தட்சிணாமூர்த்தி கூறியதாவது:இலவச தங்கும் விடுதி, 2008ல் இருந்து செயல்படுகிறது. தரைதளத்தில், பெரிய ஹாலில், 30 பேர் உறங்கலாம். மேல்தளத்தில், இரு தனி அறைகள் மற்றும் இரு குளிர் சாதன அறைகளும் உள்ளன. 25 பேர் தங்கலாம்.கழிப்பறை, குளியல் அறை குடிநீர் போன்ற வசதி களும் உள்ளன. உடைமைகள் பாதுகாக்க, லாக்கரும் உண்டு.கோவிலுக்கு வரும் பக்தர்கள், இலவசமாக தங்கிச் செல்லலாம். சமைத்து சாப்பிட விரும்பு வோருக்கு, வேண்டிய பாத்திரம், சமையல் காஸ் வசதியும் உள்ளன.ஒருவர், மூன்று நாட்களுக்கு மேல் தங்க முடியாது. விபரங்களுக்கு, 90471 06213 என்ற மொபைல் போனில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.