காளையார்கோவில் சொர்ண காளீஸ்வரர் கோயிலில் குருபெயர்ச்சி சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05அக் 2018 12:10
காளையார்கோவில்: காளையார் கோவில் சொர்ண காளீஸ்வரர் கோயிலில் குருபெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. குரு பகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாவதை முன்னிட்டு காளையார்கோவில் சொர்ண காளீஸ்வரர் கோயிலில் நேற்று (அக்.,4ல்) காலை முதல் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தங்களது பெயர், ராசி, நட்சத்திரங்களை கூறி கட்டணம் செலுத்தி மாலையில் நடைபெற்ற குருப் பெயர்ச்சி சிறப்பு பூஜைக்கு முன்பதிவு செய்தனர்.
மாலை 6:00 மணி முதல் கோயிலுக்குள் சோழீஸ்வரர், காளீஸ்வரர், சுந்தரேஸ்வரர் சன்னதி களுக்கு அருகில் உள்ள 3 தட்சிணாமூர்த்திகளுக்கும் சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தன. இரவு 10:00 மணிக்கு குருபெயர்ச்சியான நேரத்தில் கோயில் ஸ்தானீகம் காளீஸ்வர குருக்கள் தலைமையில் ஜெபஹோம பூஜைகள், அபிேஷக ஆராதனைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் குருபகவானை தரிசித்தனர். ஏற்பாடுகளை கோயில் கண்காணிப்பாளர் சரவண கணேசன், தேவஸ்தான மேலாளர் இளங்கோ செய்திருந்தனர்