ஜெபம் என்பது ஆன்மீக முயற்சியின் முதல்படி. ஜெபம் செய்வதற்கு நேரம், காலம் என எதுவும் கிடையாது. எப்போதெல்லாம் ஓய்வு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் செய்யலாம். மந்திர உச்சாடனம், திருமறைப் பாடல்களைத் தனியாகவோ, கூட்டாகவோ மனம் உருகிப் பாடுதல், இறைவனின் நாமாவளியைக் கூறிப் போற்றுதல், மகான்களின் திருநாமங்களைக் கூறிப் போற்றுதல் போன்றவையே ஜெபம்ஆகும். வள்ளல்பெருமாள் அருளிய மகா மந்திரம். அருட்பெருஞ்சோதி.... அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி! என்பது உயிர்பாதுகாப்பு, காரியசித்தி போன்றவற்றிற்குச் சிறந்த மந்திரம். இந்த வானத்தையும் கடந்த சுத்த வெளித் தத்துவத்தைக் கொண்டு விளங்குவதே நம் ஆன்மா. பல்லாயிரம் ஆண்டுகளாய்ப் பழக்கத்தில் இருந்து வரும் சிவமந்திரம் இது. மகான்கள், சித்தர்கள், சைவநாயன்மார்கள் போற்றிய மந்திரம்.
சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய வசி ஓம் சிவ சிவ சிவ ஓம்
சகல வெற்றிகளுக்கும் உதவும் சர்வ சக்திமிக்க மந்திரம் இது. விஸ்வாமித்திர மகரிஷியின் காயத்ரி மந்திரம், திருமூல தேவரின் நவாட்சரி மந்திரம் போன்றவற்றையும் உபதேசமாகப் பெற்று உச்சரிக்கலாம். ஓம் சக்தி... ஓம் கங் கணபதியே நமஹ.... ஓம் சரவண பவாய நமஹ..... ஓம் நமோ நாராயணாய.... இப்படி எத்தனையோ மந்திரங்கள் உள்ளன. உபதேசமாகப் பெற்று ஜெபிக்கலாம். தேவாரம், திருவாசகம், திருப்புகழ், திருவருட்பா போன்ற உணர்வுத் திருமறைப் பாடல்களை இசையுடன் பாடிப் பாராயணம் செய்தால் மிகுந்த பலன் உண்டு. மனஒருமை, நல்ல நினைவாற்றல், பொறுமை, எண்ணிய செயலில் வெற்றி போன்ற பல நன்மைகளைத் தரவல்ல சக்தி ஜெபத்திற்கு உண்டு. ஜெபமே ஜெபம் ! என்பதை உணர்ந்து, இடைவிடாத மந்திர உச்சாடனத்தின் மூலமும் மகான்களின் நாம் ஜெபத்தின் மூலமும் இணையற்ற வெற்றிகளைப் பெற்று வாழ்க!