மயிலாடுதுறை துலாக்கட்டத்தில் அந்திம புஷ்கரம் விழா: தீர்த்தவாரியுடன் தொடக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08அக் 2018 05:10
மயிலாடுதுறை: மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் அந்திம புஷ்கவர விழா தீர்த்தவாரியுடன் தொடங்கி நான்கு நாட்கள் நடைபெறுகிறது.
குருபகவான் கன்னி ராசியில் இருந்து துலாம்ராசிக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பெயர்ச்சியடைந்ததை முன்னிட்டு துலாம் ராசிக்கு உரிய நதியான காவிரியில் கடந்த ஆண்டு செ ப்டம்பர் மாதம் நாகை மாவட்டம் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் மகா புஷ்கரம் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. பல லட்சம் பக்தர்கள் கலந்துகொண்டு காவிரியில் புனி தநீராடினர். தற்போது குருபகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிகராசிக்கு இடம் பெயர்வதை முன்னிட்டு திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றில் 12 நாட்கள் தாமிரபரணி புஷ்கரம் வி ழா நடைபெறவுள்ளது. குருபகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிகம் ராசிக்கு இடம் பெயர்வதால் அந்திம புஷ்கரம் விழா நடத்த காவிரி புஷ்கரம் கமிட்டியினர் திட்டமிட்டு மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டம் வடக்குகரை பகுதியில் சிறப்பு ஹோமங்களுடன் அந்திமபுஷ்கரம் விழா தொடங்கியது.
வரும் 11ம் தேதி வரை அந்திம புஷ்கம் விழா நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு நேற்று தொடங்கிய சிறப்பு ஹோமங்கத்தில் தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன் ஆகியோர் சங்கல்பம் செய்து வழிபாடு நடத்தினர். தொடர்ந்து மதியம் 12 மணியளவில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ வதானேஸ்வரர் சுவாமி கோயிலில் இருந்து அஸ்திரதேவர் காவிரி துலாக்கட்டத்திற்கு எழுந்தருள தருமபுரம் ஆதீனம் இளைய சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீனம் கட்டளை விசாரணை அம்ப லவாண தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் முன்னிலையில் அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று, சுவாமி தீர்த்தம் கொடுக்க திரளான பக்தர்கள் காவிரியில் புனித நீராடினர். இதில் புஷ்கர கமிட்டி ஒருங்கிணைப்பாளர் மகாலட்சுமி, சிவபுரம் வேத சிவாகம பாடசாலை நிறுவனர் சாமிநாத சிவாச்சாரியார், புஷ்கரகமிட்டி பொறுப்பாளர்கள் தமிழ்ச்செல்வன், ஜெகவீரபாண்டியன், தியாகராஜன், அப்பர்சுந்தரம் உட்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். அந்திம புஷ்கரத்தையொட்டி தினமும் மாலை காவிரித்தாய்க்கு ஆரத்தி வழிபாடுகள் நடைபெறுகிறது.