பதிவு செய்த நாள்
11
அக்
2018
12:10
நாமக்கல்: நவராத்திரி விழாவை முன்னிட்டு, நாமக்கல் நகரில் பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடக்கிறது.
* நாமக்கல், கோட்டை சாலை நரசிம்ம சுவாமி கோவிலில், நேற்று முன்தினம் நவராத்திரி விழா துவங்கியது. நாமகிரித்தாயார் சன்னதி முன், பிரம்மாண்ட கொலு வைக்கப்பட்டுள்ளது. தினமும் காலை, 8:00 மணிக்கு அரங்கநாயகியத்தாயார் பேட்டை திருவீதி உலா, 9:00 மணிக்கு நாமகிரித்தாயார் கோட்டை திருவீதி உலா, இரவு 7:00 மணிக்கு நரசிம்மர் சுவாமி தாயார் சன்னதியில். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அவதாரத்தில் எழுந்தருளி சுவாமிக்கு தீபாராதனை நடக்கிறது. பள்ளி மாணவ, மாணவியரின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
* நாமக்கல், தட்டாரத்தெரு ஏகாம்பரேஸ்வரர் கோவிலில், நேற்று முன்தினம் இரவு துவங்கிய விழா, வரும், 19 வரை நடக்கிறது.
* நாமக்கல், ஓம்சக்தி விநாயகர் கோவிலில், தினமும் இரவு 7:00 முதல், 8:00 மணி வரை, பல்வேறு அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. வரும், 19 மாலை, 5:00 மணிக்கு துர்கா ?ஹாமம், சிறப்பு அபி ?ஷகம் நடக்கிறது.
* நாமக்கல், வாசவி கன்னிகாபரமேஸ்வரி அம்மன் சத்திரத்தில், வரும், 20 வரை, தினமும் காலை, 5:45 மணிக்கு விஸ்வரூப தரிசனம். 7:00 மணிக்கு அபி ?ஷகம், வேதபாராயணம், 8:00 மணிக்கு தங்கக் கவச சேவை, 9:00 மணிக்கு அலங்கார தீபாராதனை, மாலை, 6:00 மணிக்கு லலிதாதேவி பூஜை. இரவு, 8:00 மணிக்கு கொலு மண்டபத்தில் பல்வேறு வாகன சேவா அலங்கார தீபாராதனை நடக்கிறது.
* நாமக்கல் அடுத்த, செல்லப்பம்பட்டி சுயம்பு மகாமாரியம்மன் கோவிலில், காஞ்சி காமாட்சி அம்மன் அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். ஆன்மிக சொற்பொழிவு, பரதநாட்டியம், பக்தி பாடல்கள், பஜனை போன்ற நிகழ்ச்சிகள் நடக்கிறது.