பதிவு செய்த நாள்
11
அக்
2018
01:10
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் உள்ள சிலைகளை, நேற்று முன்தினம் இரவு, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், எடை போட்டு பார்த்து, ரகசியமாக ஆய்வு நடத்தி உள்ளனர்.சென்னை தொழிலதிபர் ரன்வீர் ஷா வீட்டில், சிலைகள் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் தலைமையில், 50க்கும் மேற்பட்ட போலீசார், செப்., 29ல், தஞ்சாவூர் பெரிய கோவிலில், மூன்று மணி நேரத்திற்கும் மேலாக ஆய்வு நடத்தினர்.இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, டி.எஸ்.பி., சுந்தரம் தலைமையில், தஞ்சாவூர், எஸ்.பி., செந்தில்குமார் மற்றும், 10க்கும் மேற்பட்ட போலீசார், இரவு, 7:00 மணிக்கு, பெரிய கோவிலுக்கு வந்தனர்.கோவிலில் இருக்கும் சிலைகள் ஒரிஜினலா, அதன் எடை சரியாக உள்ளதா என, எடை போட்டு சரிபார்த்துள்ளனர். மேலும், அறநிலையத் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் சிலைகள் குறித்து, விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணை இரவு, 11:00 மணி வரை நடந்துள்ளது.