பதிவு செய்த நாள்
11
அக்
2018
01:10
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நிறுத்தப்பட்ட புதிய பிரசாதங்கள் மீண்டும் விற்பனைக்கு வருமா என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். கோயில் சார்பில் ஏற்கனவே அப்பம், லட்டு, தேன்குழல், சர்க்கரை பொங்கல், புளியோதரை, உளுந்த வடை பிரசாதங்கள் பக்தர்களுக்கு விற்கப்படுகின்றன. ஜன., முதல் கூடுதலாக சுண்டல், தினைமாவு, அதிரசம், மைசூர்பாகு, லெமன் சாத பிரசாதம் விற்கப்பட்டது. இவை சில மாதங்களாக விற்கப்படவில்லை. கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் ஐயப்பன், முருக பக்தர்கள் ஏராளமானோர் கோயிலுக்கு வருகை தருவர். எனவே இந்த பிரசாதங்களை மீண்டும் விற்கவேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.