பதிவு செய்த நாள்
11
அக்
2018
01:10
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், ஆன்மிக பெண் சொற்பொழிவாளர் ஒருவர், திருப்பாவையில் உள்ள, 30 பாசுரத்திற்கும் தனித்தனியே கொலு பொம்மை வைத்துள்ளார்.காஞ்சிபுரம், யதோக்தகாரி கிழக்கு மாட வீதியை சேர்ந்த, ஆன்மிக பெண் சொற்பொழிவாளர், விஜயா ராகவன், திருப்பாவையில் உள்ள, 30 பாசுரங்களுக்கும் விளக்கம் தரும் வகையில், தன் வீட்டில் கொலு பொம்மைகள் வைத்துள்ளார்.இதுகுறித்து, அவர் கூறியதாவது:பல தலைமுறையாக ஒவ்வொரு ஆண்டும், புதுமையான நவராத்திரி கொலு பொம்மை வைக்கிறோம். இந்தாண்டு, திருப்பாவையில் உள்ள, பாசுரங்களுக்கு விளக்கம் தரும் வகையில், கொலு பொம்மை வைக்க முடிவு செய்தோம்.அதன்படி, எட்டு மாதங்களுக்கு முன்பே, பாசுரத்தில் உள்ள கதாபாத்திரங்களுக்கு ஏற்ற பொம்மைகளை மயிலாப்பூர், புதுச்சேரி, சென்னை குறளகம் போன்ற இடங்களில் வாங்கினோம். சில பொம்மைகளை நாங்களே தயார் செய்தோம்.ஆண்டாள் ஜனனம் முதல், 30 பாசுரங்களுக்கும் தலைப்புகள் எழுதி, பொம்மை வைத்துள்ளோம். இது, மகிழ்ச்சி அளிக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.