பதிவு செய்த நாள்
12
அக்
2018
12:10
திருவொற்றியூர்: திருவொற்றியூர், வடிவுடையம்மன் கோவில் நவராத்திரி திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கியது.திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி - வடிவுடையம்மன் கோவில், 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஆண்டுதோறும் புரட்டாசியில், நவராத்திரி திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு, நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு, கொடியேற்றத்துடன் நவராத்திரி விழா துவங்கியது. முன்னதாக, அம்மன் சன்னதி முன்பு இருக்கும் கொடி மரத்தை, மஞ்சள் நீர் கொண்டு சுத்தம் செய்தனர்.பின், தீப துாப ஆராதனைகள் செய்யப்பட்டு, மங்கள வாத்தியங்கள் முழங்க, கொடியேற்றம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, அம்மன் தபசு அலங்காரத்தில், மாடவீதி உலா உற்சவம் நடைபெற்றது. நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும், பராசக்தி, நந்தினி, கவுரி, பத்மாவதி, உமா மகேஸ்வரி, ராஜ ராஜேஸ்வரி, மஹிஷாசுர மர்த்தினி, சரஸ்வதி, மீனாட்சி அலங்காரத்தில், அம்மன் மாடவீதி உலா உற்வசம் நடைபெறும்.விழாவின், கடைசி நாளான, 19ம் தேதி, தியாகராஜர் மாடவீதி உலா உற்சவம், இரவு கொடியிறக்கத்துடன், நவராத்திரி திருவிழா நிறைவுறும்.