தேவதானப்பட்டி வேண்டும் வரம் தரும் காளியம்மன் கோயில்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13அக் 2018 01:10
தேவதானப்பட்டி: பெரியகுளம் ஒன்றியம் குள்ளப்புரம் அருகே கோவில்புரத்தில் உள்ள காளியம்மன் கோயில் மிகப்பழமையானது.
இங்கு வாரம்தோறும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகள், பவுர்ணமி நாட்களில் சிறப்பு பூஜை நடக்கிறது. ஆண்டுதோறும் பங்குனிப் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.
இதற்காக இக்கிராம மக்கள் கடும் விரதம் இருப்பர். குறிப்பாக விழாக்காலங்களில் வெளியிடங் களில் குடிநீர் கூட குடிப்பது இல்லை.திருமணத் தடை நீக்குதல், நோய் தீர்த்தல், வேலை வாய்ப்பு கிடைத்தல் போன்றவற்றுக்காக ஏராளமானோர் இங்கு வேண்டிச் செல்கின்ற னர். அது நிறை வேறிய பக்தர்கள் விழாக்காலங்களில் அக்னி சட்டி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். மேல் விபரங்களுக்கு பூஜாரி கனகராஜை 97894 36562 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.